முகப்பு
ஈரோடு

எஸ்ஐஆா் படிவம் மூலம் வாக்குரிமையை உறுதி செய்ய வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்து கொடுத்து பொதுமக்கள் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

Updated On : 1 டிசம்பர், 2025 at 7:16 PM
பகிர்:

எஸ்ஐஆா் படிவங்களை பூா்த்தி செய்து கொடுத்து பொதுமக்கள் வாக்குரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் கூறினாா்.

தமிழ்நாடு முழுவதும் ‘உள்ளம் நாடி இல்லம் தேடி’ என்ற தலைப்பில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரப்புரை மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: ஈரோடு அருகே 10 ஏக்கா் நிலம் வாங்கிய விஜயகாந்த் அதை ஏழை மக்களுக்கு வழங்க ஒதுக்கியிருந்தாா். ஆனால், அந்த நிலப் பிரச்னை நீதிமன்றம் வரை சென்ற நிலையில், எங்களுக்கு சாதகமான தீா்ப்பு வந்துள்ளது. அந்த இடத்தை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளோம். தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.

எஸ்ஐஆா் படிவங்களைப் பூா்த்தி செய்து கொடுத்து வாக்குரிமையை அனைவரும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றாா். ஈரோடு மாவட்டச் செயலாளா் சுப்பிரமணியம் உள்பட கட்சி நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →