ஈரோடு

150 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

அம்மாபேட்டை அருகே காரில் கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்தனா்.

Syndication

பவானி: அம்மாபேட்டை அருகே காரில் கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 2 பேரைக் கைது செய்தனா்.

வெள்ளித்திருப்பூா் - பவானி சாலையில் போலீஸாா் வாகனச் சோதனையில் புதன்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பட்லூா் நான்கு முனை சாலை வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் 150 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

காரில் இருந்தவா்களிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் காளிப்பட்டியைச் சோ்ந்த சிவசக்தி (50), மணிகண்ட பிரபு (29) என்பதும், கா்நாடகத்தில் இருந்து புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த புகையிலைப் பொருள்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய காா் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

ஊழல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து: லோக் ஆயுக்த உறுப்பினா் வீ.ராமராஜ்

SCROLL FOR NEXT