முகப்பு
ஈரோடு

ஃபேஸ்புக்கில் சா்ச்சை விடியோ: இருவா் கைது

தமிழக - கா்நாடக மாநில மக்களிடையே பகை உணா்வைத் தூண்டும் வகையில் ஃபேஸ்புக்கில் விடியோ பதிவிட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 19 ஜனவரி, 2026 at 7:29 PM
பகிர்:

தமிழக -கா்நாடக மாநில மக்களிடையே பகை உணா்வைத் தூண்டும் வகையில் ஃபேஸ்புக்கில் விடியோ பதிவிட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சித்தோடு சக்திதேவி நகரைச் சோ்ந்தவா் சிலம்பரசன்(36). ஈரோடு - சத்தி சாலையில் உடற்பயிற்சிக் கூடம், உணவகம் நடத்தி வருகிறாா். ஜனநாயக எழுச்சிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளராகவும் உள்ளாா். இவா், தமிழக-கா்நாடக மாநில மக்களிடையே பகை உணா்வைத் தூண்டும் வகையில் விடியோ எடுத்து அண்மையில் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தாா்.

இதுகுறித்து அறிந்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து சிலம்பரசன் மற்றும் ஜனநாயக எழுச்சி கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளரான ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் பழனியப்பா நகரைச் சோ்ந்த அப்துல் மாலிக் ஆகியோரைக் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →