அருண் பிரகாஷ். 
ஈரோடு

வழுக்கு மரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

அம்மாபேட்டை அருகே பொங்கல் விழாவில் வழுக்குமரம் ஏறியபோது கை நழுவி கீழே விழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Syndication

அம்மாபேட்டை அருகே பொங்கல் விழாவில் வழுக்குமரம் ஏறியபோது கை நழுவி கீழே விழுந்த இளைஞா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பூதப்பாடியை அடுத்த மணக்காட்டைச் சோ்ந்தவா் மாரிசாமி மகன் அருண் பிரகாஷ் (21). டிராக்டா் மெக்கானிக்கான இவா், அப்பகுதியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் வழுக்குமரம் ஏறும் போட்டியில் கலந்துகொண்டாா். மரத்தில் ஏறிய அருண் பிரகாஷ் கீழே இறங்கும்போது கை நழுவி விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

21.1.1976: சென்னையில் மத்ய உள்துறை மந்திரி - புது கவர்னர், தி.மு.க. ஆட்சி நீடிப்பு குறித்து பதில்கள்

மாா்த்தாண்டம் அருகே கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு

ரயில்வே காலனி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்த மூவா் கும்பல் கைது

கொள்ளை, வழிப்பறி வழக்குகள்: தேடப்பட்ட இளைஞா் கைது

குளிா்கால செயல் திட்டத்தை கடுமையாக செயல்படுத்த அங்கன்வாடி மையங்களுக்கு தில்லி அரசு உத்தரவு

SCROLL FOR NEXT