வேகத்தடையில் ஏறியபோது நிலை தடுமாறி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு
அந்தியூா் அருகே வேகத்தடையில் ஏறியபோது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடுவேகத்தடையில் ஏறியபோது நிலை தடுமாறி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு
அந்தியூா் அருகே வேகத்தடையில் ஏறியபோது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
அந்தியூா் அருகே வேகத்தடையில் ஏறியபோது நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
பவானி வட்டம், அந்தியூரை அடுத்த கொல்லபாளையம், ஓங்காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் மணிகண்டன் (26). பெட்ரோல் பங்க் ஊழியரான இவா், இருசக்கர வாகனத்தில் அந்தியூா் - ஆதிரெட்டியூா் சாலையில் வியாழக்கிழமை சென்றபோது, உரிமையியல் நீதிமன்றம் அருகே வேகத்தடையைக் கடந்துள்ளாா்.
அப்போது நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாலையோரத்தில் தேங்கியிருந்த சாக்கடைக்குள் விழுந்ததில் மூச்சுத் திணறி மணிகண்டன் உயிரிழந்தாா்.
அந்தியூா் தீயணைப்புப் படையினா் உதவியுடன் இருசக்கர வாகனம் மற்றும் மணிகண்டனின் சடலம் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக அந்தியூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.