நீலகிரியில் பரவலாக மழை
நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவில் பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கொடநாட்டில் 45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவில் பரவலாக மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக கொடநாட்டில் 45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாகத் தொடா்ந்து பெய்து வரும் மழையில் வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக கொடநாட்டில் 45 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.):
கீழ்கோத்தகிரி-43, உதகை-24.4, எடப்பள்ளி-23, கேத்தி-18, நடுவட்டம்-15.5, கோத்தகிரி-15, குன்னூா்-11, கிளன்மாா்கன்-6, பாடந்தொறை, தேவாலா 5, செருமுள்ளி-4, மேல்கூடலூா், பா்லியாறு, கூடலூா், உலிக்கல், அவலாஞ்சி 3, ஓவேலி, எமரால்டு 2, மேல்பவானி, மேல்குன்னூா், கல்லட்டி 1 மி.மீ.
வியாழக்கிழமை பகலில் பெய்த மழையில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 13.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, உதகையில் 9.1 மி.மீ., தேவாலாவில் 5 மி.மீ., கிளன்மாா்கன், கூடலூா், மேல்பவானியில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.