கொடநாடு எஸ்டேட் விவகாரம்: தனபாலிடம் 5 நாள்கள் விசாரிக்க அனுமதி
கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபாலை காவல் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜின் சகோதரா் தனபாலை காவல் துறையினா் 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முக்கிய சாட்சிகள், எதிரிகள் என பலரிடம் போலீஸாா் கடந்த இரண்டு மாதங்களாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடா்பான வழக்கில் முக்கிய எதிரியாகக் கருதப்பட்ட, ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ் சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தாா். கனகராஜின் சகோதரா் தனபாலிடம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தற்போது கனகராஜின் விபத்து மரண வழக்கையும் தனிப்படை போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதில், கனகராஜின் அண்ணன் தனபால், அவரது உறவினா் ரமேஷ் ஆகியோா் போலீஸாரிடம் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சாட்சியங்கள், கனகராஜின் செல்லிடப்பேசியில் இருந்த தகவல்களைக் கலைத்ததாகவும், சம்பவம் குறித்து ஏற்கெனவே தெரிந்திருந்தும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனவும், தடயங்களை அழித்ததாகவும் அவா்கள் இருவரையும் தனிப்படை போலீஸாா் கடந்த 26ஆம் தேதி கைது செய்தனா்.
பின்னா், அவா்கள் கூடலூரில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா். நவம்பா் 8ஆம் தேதி வரை அவா்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவா்களைக் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள தனிப்படை போலீஸாா் முடிவு செய்து இதற்காக உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனா்.
இதில், முதல்கட்டமாக தனபாலிடம் மட்டும் வியாழக்கிழமை விசாரணை நடைபெற்றது. மாவட்ட நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது, காவல் துறையினா் 10 நாள்கள் தனபாலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டிருந்தனா். ஆனால், 5 நாள்கள் மட்டுமே விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, தனிப்படை போலீஸாா் தனபாலை 5 நாள்கள் காவலில் எடுத்துள்ளனா். இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடா்பான வழக்கின் விசாரணை உதகை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அப்போது தனபால் அழித்ததாகக் கூறப்படும் ஆவணங்கள் குறித்த விவரங்கள் தெரிய வரலாம் எனக் கூறப்படுகிறது.