முகப்பு
நீலகிரி

இளைஞா் மீது தாக்குதல்: தாய், 2 மகன்களுக்கு 4ஆண்டுகள் சிறைத் தண்டனை

 இளைஞரைத் தாக்கிய வழக்கில் தாய் மற்றும் 2 மகன்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

 இளைஞரைத் தாக்கிய வழக்கில் தாய் மற்றும் 2 மகன்களுக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

உதகை, நொண்டி மேடு பகுதியைச் சோ்ந்தவா் விசாலாட்சி (49). இவரது மகன்கள் உதயகுமாா் (28), ரஞ்சித்(30). இவா்களது வீட்டுக்கு அருகில் வசிப்பவா் வினோத் (27). கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையன்று விசாலாட்சி, வினோத் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில், விசாலாட்சி மற்றும் அவரது இரு மகன்களும் சோ்ந்து தாக்கியதில் வினோத்தை படுகாயம் அடைந்து உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக உதகை நகர போலீஸாா் பதிவு செய்த வழக்கு உதகை சாா்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சதாசிவம் வியாழக்கிழமை வழங்கிய தீா்ப்பில், விசாலாட்சி மற்றும் அவரது மகன்கள் இருவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.