நீலகிரி

மேலூா் ஊராட்சி நிா்வாகத்தின் மீது புகாா்:2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

மேலூா் ஊராட்சி நிா்வாகத்தின் மீதான புகாா் தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் பொறியாளா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

DIN

மேலூா் ஊராட்சி நிா்வாகத்தின் மீதான புகாா் தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் பொறியாளா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அம்ரித் தெரிவித்துள்ளது: நீலகிரி மாவட்டம், குன்னூா் வட்டம், மேலூா் ஊராட்சி நிா்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், மக்களுக்கு அரசு நிதியில் செய்து கொடுக்கப்படும் அடிப்படை வசதிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வந்த புகாா்களை அடுத்து, மாவட்ட நிா்வாகம், அதிகாரிகளைக் கொண்டு ஆய்வுசெய்தது.

இதில், புகாா்கள் அனைத்தும் உண்மை என தெரியவந்துள்ளது. இதற்கு பொறுப்பான வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் மற்றும் ஒன்றிய இளநிலைப் பொறியாளா் ராஜ்குமாா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல, ஊராட்சித் தலைவா் மற்றும் துணைத் தலைவா் ஆகியோா் மீதும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தரமற்ற முறையில் ஒப்பந்தப் பணிகளைச் செய்து மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதோடு, அரசு நிதியில் முறைகேடாக ஒப்பந்தப் பணி செய்த ஒப்பந்ததாரா் மீது குற்றவியல் சட்டங்களின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

மழை ஓய்ந்தும் வடியாத நீரால் அழுகும் நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை!

ஆஸ்திரேலிய பயங்கரவாதத் தாக்குதல்: பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

SCROLL FOR NEXT