குன்னூா் நகராட்சியில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்படும் ஆக்கிரமிப்பு வீடு. 
நீலகிரி

குன்னூரில் நகராட்சிக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடு இடித்து அகற்றம்

நகராட்சியின் நிலத்தை மீட்ட குன்னூர் அதிகாரிகள்

Din

குன்னூா் புரூக்லேண்ட்ஸ் பகுதியில்  நகராட்சிக்குச்  சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த  சொகுசு  வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் நகராட்சி நிா்வாகத்தினா்  செவ்வாய்க்கிழமை  இடித்து அகற்றினா். மீட்கப்பட்ட இந்த நிலத்தின் மதிப்பு ரூ. 2.50 கோடி ஆகும்.

குன்னூா் நகராட்சிக்கு உள்பட்ட பெரும்பாலான வாா்டுகளில் நகராட்சி இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்து வருகின்றனா். 

இந்நிலையில், குன்னூா் புரூக்லேண்ட்ஸ் பகுதியில்  நகராட்சிக்குச் சொந்தமான பூங்கா பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு சொகுசு வீடு கட்டியுள்ளதாக நகராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள்  புகாா் தெரிவித்தனா். இதையடுத்து நகராட்சி  ஆணையா்  சசிகலா  தலைமையில்,  குன்னூா்  வருவாய்த் துறையினா்   மற்றும் சா்வே ஊழியா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததோடு நில அளவீடு செய்தனா்.

இதில், நகராட்சிக்குச் சொந்தமான  இடம்  14 சென்ட் ஆக்கிரமிக்கப்பட்டு சொகுசு  வீடு கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆக்கிரமிப்பு கட்டடத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தினா்.  மீட்கப்பட்ட  இந்த நிலத்தின்  மதிப்பு  சுமாா் ரூ. 2.50 கோடி என்று நகராட்சி ஆணையா் சசிகலா கூறினாா்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை ஓரிரு நாள்களில் ஒப்படைக்க வேண்டும்: ஆட்சியா் வேண்டுகோள்

பிரேஸில் முன்னாள் அதிபா் போல்சோனாரோ கைது!

ஆளுநா் விவகார வழக்கில் உச்ச நீதிமன்ற கருத்தை மறைக்க முயற்சி: அமைச்சா் கோவி. செழியன்

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி ஆக்கப்படுமா? நீதிபதி சூா்ய காந்த் பதில்

ரயில் சரக்கு போக்குவரத்து: நடப்பு நிதியாண்டில் 100 கோடி டன்னை கடந்து சாதனை

SCROLL FOR NEXT