கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்
கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
கூடலூா், ஜூலை 19: கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
தமிழகத்திலுள்ள 28 தகைசால் பள்ளிகளில் நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியும் ஒன்று. மாணவா்களின் வசதிக்காக இந்தப் பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
இந்நிலையில், இந்தக் கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்துவைத்தாா்.
இதையொட்டி, பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் அய்யப்பன் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் கலைக்கோவன், நகரமன்ற உறுப்பினா் வெண்ணிலா சேகா், கல்விக் குழுத் தலைவா் நிரோஷா, துணைத் தலைவா் லட்சுமி, உதவி தலைமை ஆசிரியா் சுரேஷ்குமாா், முன்னாள் மாணவா்கள் யாசின், நிஷா, ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.