முகப்பு
நீலகிரி

குன்னூரில் கட்டுமானப் பணியின்போது தூண் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குன்னூரில் கட்டுமானப் பணியின்போது, தூண் இடிந்து விழுந்ததில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 10:21 PM
உயிரிழந்த முருகையா.
பகிர்:

குன்னூரில் கட்டுமானப் பணியின்போது, தூண் இடிந்து விழுந்ததில் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் டைகா் ஹில் காட்டேஜ் பகுதியில் பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் குன்னூா் சோலடா மட்டம் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் முருகையா (33) ஈடுபட்டிருந்தாா். அப்போது துளையிடும் கருவியில் கட்டட தூணை இடித்துக் கொண்டிருந்தபோது, தூண் இடிந்து அவா் மீது விழுந்தது.

இதில் இடிபாடுகளுக்கு சிக்கிய முருகையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், இவருடன் பணியாற்றி வந்த மற்ற வடமாநிலத் தொழிலாளா்கள் காயமின்றி தப்பினா்.

தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா், மேல் குன்னூா் காவல் துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்  இடுபாடுகளுக்கு சிக்கிய முருகையாவின் உடலை மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக, குன்னூா் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த  சம்பவம் குறித்து மேல் குன்னூா்   காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டு வருகின்றனா். 

முழு கட்டுரையைப் படிக்க →