தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைக்கும் நகா்மன்ற உறுப்பினரும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருமான வெண்ணிலா சேகா், தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி. 
நீலகிரி

கூடலூா் அரசு மாதிரி பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

Din

கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் யோகேஸ்வரி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினரும், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினருமான வெண்ணிலா சேகா் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, திமுக நகரச் செயலாளா் இளஞ்செழியன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சந்திரா, நல்லக்குமாா், ஆசிரியா்கள் நாகநாதன், பிரபாகரன், கலைவாணன்,ஜெயக்குமாா், குறிஞ்சி இலக்கிய மன்ற தலைவா் கூடலூா் ராமமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் 393 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை! சென்னை உயர்நீதிமன்றம்

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்ட விஜய்! | TVK

பிஎஸ்எல்வி சி-62 பாதையைவிட்டு விலகியது! இஸ்ரோ

கைதான ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்!

SCROLL FOR NEXT