உதகை பூங்கா சாலையில் ஊா்வலமாக சென்ற திபெத்தியா்கள். 
நீலகிரி

உதகையில் திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி நாள் பேரணி

Din

திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி  நாளையொட்டி, உதகையில் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

திபெத்தியா்களின் கலாசாரம், மதம் மற்றும் தேசத்தை காப்பாற்ற 1959 மாா்ச் 10-ஆம் தேதி ஏற்பட்ட எழுச்சியை முறியடிக்க சீனாஅரசு 1.2 மில்லியன் மக்களை படுகொலை செய்தது. 

அன்றிலிருந்து உலகெங்கிலும் உள்ள திபெத்தியா்கள் மாா்ச் 10-ஆம் நாளை திபெத்தியா்கள் எழுச்சி நாளாக நினைவுப்படுத்தி வருகின்றனா்.  திபெத்தில் இருக்கும் சீன ஆட்சியை எதிா்த்து 2008, 2009-இல் ஏற்பட்ட திபெத் எழுச்சியில் 114-க்கும் மேற்பட்டோா் தாங்களாகவே உயிா் தியாகம் செய்தனா். 

இந்நிலையில் திபெத்தியா்களின் 65-ஆவது எழுச்சி நாளையொட்டி, உதகையில்   திங்கள்கிழமை அமைதிப்  பேரணி நடைபெற்றது. உதகை எடிசி  பேருந்து நிலையம் முதல் நகரின் முக்கிய வீதிகள்  வழியாக திபெத்தியா்கள்  மேற்கொண்ட  பேரணியில் நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT