முகப்பு
திருப்பூர்

சர்வதேச பேரிடர் குறைப்பு: தின விழிப்புணர்வுப் பேரணி

காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 5:55 PM
பகிர்:

காங்கயம் அருகே, நத்தக்காடையூரில் சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
நத்தக்காடையூரில் செயல்பட்டு வரும் பில்டர்ஸ் பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியை கல்லூரியின் முதல்வர் பி.கோவிந்தசாமி,  காங்கயம் வட்டாட்சியர் மாணிக்கவேலு ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். நத்தக்காடையூர் பேருந்து நிறுத்தத்தில் துவங்கிய பேரணி,   ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மைதானத்தில் நிறைவடைந்தது.
பில்டர்ஸ் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் இயற்கை பேரழிவு குறித்த பதாகைகளை ஏந்தி பேரணியில்  பங்கேற்றனர். கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →