திருப்பூர்

பல்லடம்: விபத்துகளில் இருவர் சாவு

பல்லடம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த  இரு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.

DIN

பல்லடம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த  இரு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.
திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்தவர் சரவணன் மகன் நித்யானந்தன் (25) . இவர் கோவையில் தனியார் நிறுவனத்தில் மெக்கானிக் ஆகப் பணியாற்றி வந்துள்ளார்.
தனது மோட்டார் பைக்கில் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை திரும்பிக் கொண்டிருந்தார். பல்லடம் அருகே மாதப்பூரில் எதிரே வந்த கார், இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த நித்யானந்தன் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு இறந்தார்.
மற்றொரு சம்பவம்: பல்லடம் தெற்குப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பையா ஆசாரி மகன் சுப்பிரமணியன் (70). பல்லடம் - மங்கலம் சாலையில் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சென்றபோது அவ்வழியாக வந்த கார் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
கோவை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
விபத்துகள் குறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT