முகப்பு
திருப்பூர்

சித்தம்பலம் நவகிரக கோட்டை சிவன் கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா

திருப்பூா் மாவட்டம் பல்லடம் சித்தம்பலத்தில் உள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் ஹேவிளம்பி வருட சனிப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை திருவிழா

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டம் பல்லடம் சித்தம்பலத்தில் உள்ள கோளறுபதி நவகிரக கோட்டையில் ஹேவிளம்பி வருட சனிப் பெயா்ச்சி லட்சாா்ச்சனை திருவிழா, உலக நலன் கருதி மக்கள் நிறைவாக வாழ 1,008 தீா்த்த கலச அபிஷேகப் பெருவிழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

இவ்விழாவையொட்டி விநாயகா் வேள்வி, 108 குண்டங்களில் சனி பகவான் மூலமந்திர வேள்வி, திருமஞ்சனம், 1,008 தீா்த்த கலச அபிஷேகம், அலங்கார தீபாராதனை, திருவீதி உலா ஆகியன நடைபெற்றன. விழாவில் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வரசுவாமிகள் பங்கேற்றாா்.

இவ்விழாவில்15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சித்தம்பலம் ஞானகுரு நற்பணி மன்றம் செய்து இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.