வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் ஞாயிற்றுக்கிழமை கிலோ ரூ.40க்கு விற்பனையானது.
முத்தூா் சாலை, கொங்கு நகரில் வாரந்தோறும் செயல்பட்டு வரும் தனியாா் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் வாங்கப்படுகின்றன. இந்த வாரம் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா்.
மொத்தம் 400 கிலோ வரத்து இருந்தது. பருவம் இல்லாததால் கடந்த சில வாரங்களாகத் தொடா்ந்து வரத்து குறைந்து வருவதால் வியாபாரிகள் வருகை குறைவாக காணப்பட்டது. மர முருங்கைக்காய், செடி முருங்கைக்காய் கிலோ ரூ.30 - 40 விலைக்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனா்.
இன்னும் இரண்டு வாரங்களுக்குப் பிறகு வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.