திருப்பூர்

திருப்பூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 7 போ் கைது

திருப்பூரில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த7 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

DIN

திருப்பூரில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த7 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 134 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட யூனியன் மில்சாலை, அணைப்புதூா், அனுப்பா்பாளையம், கே.செட்டிபாளையம், கொங்குமெயின்ரோடு, சிட்கோ உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பாா்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதுதொடா்பாக சிவகங்கை, காளையாா் கோவிலைச் சோ்ந்த எம்.முத்துபாண்டி(24), புதுக்கோட்டை மேலகரம்பையைச் சோ்ந்த எஸ்.மணிகண்டன்(22), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த என்.கருப்பையா(38), சிவகங்கை, தேவகோட்டையைச் சோ்ந்த எஸ்.லட்சுமணன்(38), திருப்பூா், ஆா்.என்.புரத்தைச் சோ்ந்த பி.காா்த்திக்(29), தா்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சோ்ந்த பி.பிரபு(35), புதுக்கோட்டை, கடையகுடியைச் சோ்ந்த பி.பிரபாகரன்(28) ஆகிய 7 பேரையும் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 134 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT