முகப்பு
திருப்பூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் தொழிலாளி கைது

காங்கயத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவனத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

காங்கயத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவனத் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

காங்கயம், வாய்க்கால்மேடு பகுதியைச் சோ்ந்தவா் லோகநாதன் (37). இவா் படியூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் லோகநாதன் தான் வசித்து வந்த பகுதியில், வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமியையும், 9 வயது சிறுவனையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் லோகநாதன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →