முகப்பு
திருப்பூர்

சூரியகாந்தி விவசாயிகளுக்கு அழைப்பு

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு சூரியகாந்தி விதை விற்பனை துவங்கவுள்ளதால் விவசாயிகள் பயன்பெறுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு சூரியகாந்தி விதை விற்பனை துவங்கவுள்ளதால் விவசாயிகள் பயன்பெறுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விற்பனைக் கூடத்தில் சூரியகாந்தி விதை வரத்து இருக்கும் சமயங்களில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. வரத்து இல்லாததால் 6 மாத காலமாக விற்பனை இல்லை. தற்போது அறுவடைப் பருவம் துவங்கியுள்ளதால் வரும் 15ஆம் தேதி வியாழக்கிழமை முதல் சூரியகாந்தி விதை ஏலம் நடத்தப்படும்.

ஒருநாள் முன்பிருந்தே வியாழக்கிழமை காலை 8 மணி வரை சூரியகாந்தி விதைகளைக் கொண்டு வரலாம். நன்கு உலர வைத்து தரமான விதைகளைக் கொண்டு வந்து கூடுதல் விலை பெற்றுப் பயன்பெறு மாறும், வங்கிக் கணக்கு புத்தக நகல் அவசியம் எனவும் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.