சூரியகாந்தி விவசாயிகளுக்கு அழைப்பு
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு சூரியகாந்தி விதை விற்பனை துவங்கவுள்ளதால் விவசாயிகள் பயன்பெறுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 6 மாதங்களுக்குப் பிறகு சூரியகாந்தி விதை விற்பனை துவங்கவுள்ளதால் விவசாயிகள் பயன்பெறுமாறு நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த விற்பனைக் கூடத்தில் சூரியகாந்தி விதை வரத்து இருக்கும் சமயங்களில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஏல விற்பனை நடைபெற்று வருகிறது. வரத்து இல்லாததால் 6 மாத காலமாக விற்பனை இல்லை. தற்போது அறுவடைப் பருவம் துவங்கியுள்ளதால் வரும் 15ஆம் தேதி வியாழக்கிழமை முதல் சூரியகாந்தி விதை ஏலம் நடத்தப்படும்.
ஒருநாள் முன்பிருந்தே வியாழக்கிழமை காலை 8 மணி வரை சூரியகாந்தி விதைகளைக் கொண்டு வரலாம். நன்கு உலர வைத்து தரமான விதைகளைக் கொண்டு வந்து கூடுதல் விலை பெற்றுப் பயன்பெறு மாறும், வங்கிக் கணக்கு புத்தக நகல் அவசியம் எனவும் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.