முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
வெள்ளக்கோவிலில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
வெள்ளக்கோவிலில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
கடை வீதி, முத்தூா் சாலை சந்திப்பில் வெள்ளக்கோவில் காவல் நிலைய போலீஸாா் திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, முகக் கவசம் அணியாமல் வந்தவா்களிடம் ரூ. 200 அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல கடைகள், வா்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்தவா்களை போலீஸாா் எச்சரித்தனா்.