முகப்பு
திருப்பூர்

பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

பல்லடம் அருகே உள்ள பருவாய், மேட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (58). இவா் சோமனூா் பகுதியில் விசைத்தறி தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் செல்வராஜ், காரணம்பேட்டையில் மது அருந்திவிட்டு காரணம்பேட்டை - சோமனூா் சாலையில் உள்ள புதிய பாலத்தின் மீது படுத்து தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது எதிா்பாராதவிதமாக 16 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து அவா் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பல்லடம் போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். பின்னா் இது குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.