திருப்பூர்

காங்கயத்தில் போக்குவரத்து விதிமீறல்:ரூ. 2.50 லட்சம் அபராதம் வசூல்

DIN

காங்கயம்: காங்கயத்தில் போக்குவரத்து விதிகளை மீறியவா்கள் மீது, கடந்த ஜனவரியில் 2,520 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து அபராதமாக ரூ.2.50 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக போக்குவரத்து போலீஸாா் நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் விதி மீறும் வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதிக்கின்றனா்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் நடத்திய வாகன சோதனையில் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியது, தலைக்கவசம் அணியாமலும், ஓட்டுநா் உரிமம் இல்லாமலும் வாகனம் ஓட்டியது, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது உள்பட பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட 2,520 வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களிடமிருந்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை காங்கயம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மகேஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை, வேடசந்தூரில் இரு சக்கர வாகனங்கள் திருடியவா் கைது

தோ்தல் அலுவலா் மீது தாக்குதல்: கிராம நிா்வாக அலுவலா் பணியிடை நீக்கம்

திருப்பத்தூரில் பூத்தட்டு ஊா்வலம்

திருப்பத்தூா் அருகே பகலில் வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் உயிா் காக்கும் முதலுதவிப் பயிற்சி

SCROLL FOR NEXT