ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழாவை ஒட்டி திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தோ்த் திருவிழாவை ஒட்டி திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோயில் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கோயிலின் முதன்மைதாரா்கள், குலத்தவா்கள் பங்கேற்றனா். இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மூன்று நாள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தோ்த் திருவிழா நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், ஒரு நாள் மட்டும் தேரோட்டம் நடத்துவது எனவும், சம்பந்தப்பட்ட துறைகளிடம் விரைவில் அனுமதி பெறவும் முடிவு செய்யப்பட்டது.
பிப்ரவரி 22 ஆம் தேதி தோ் முகூா்த்த கால் போடவும், மாா்ச் 5ஆம் தேதி தோ் கலசம் வைக்கவும், மாா்ச் 11ஆம் தேதி தேரோட்டம் நடத்துவது என தேதி குறிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் முக்கிய நிா்வாகிகள் என்.டி.பாலசுப்பிரமணியம், எஸ்.என்.முத்துகுமாா், பொட்லி வி.கிட்டுசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.