முகப்பு
திருப்பூர்

காா் மோதியதில் 2 மின் கம்பங்கள் சேதம்

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் 2 மின் கம்பங்கள் வியாழக்கிழமை சேதமடைந்தன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே காா் மோதியதில் 2 மின் கம்பங்கள் வியாழக்கிழமை சேதமடைந்தன.

வெள்ளக்கோவில் மூலனூா் பிரிவு அருகே சாலையோரத்தில் இரும்பினாலான மின் கம்பங்கள் உள்ளன. இந்நிலையில் அவ்வழியாக அதிவேகமாக வந்த சொகுசு காா் கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் வியாழக்கிழமை மோதியது. இதில் இரண்டு மின் கம்பங்கள் சேதமடைந்தன.

இதில் மின்சாரம் தானாகவே துண்டிக்கப்பட்டதால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. மேலும் சாலையில் விழுந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.