ஏப். 1 தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!
தென்காசி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பற்றி...
பங்குனி உத்திரத் திருநாளையொட்டி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 1(புதன்கிழமை) உள்ளூர் விடுமுறையாக இருந்தாலும் அந்த நாளில் பொதுத்தேர்வுகள் இருப்பின் விடுமுறை பொருந்தாது.
அதேபோல தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தாது, வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் வழக்கம்போல நடைபெறும் என்றும்
விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 11 ஆம் தேதி(சனிக்கிழமை) வேலை நாளாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
summary