வெள்ளக்கோவிலில் பரவலாக மழை
வெள்ளக்கோவிலில் பரவலாக வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்யத் துவங்கியது.
வெள்ளக்கோவிலில் பரவலாக வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்யத் துவங்கியது.
வெள்ளக்கோவில் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கடும் வெயில் காணப்பட்டது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் மாலை 5 மணிக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் நகரின் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. இந்த மழை விவசாயத்துக்கு உதவியாக இருக்குமென கூறப்படுகிறது.