முகப்பு
திருப்பூர்

உயிருக்குப் போராடிய ஆதரவற்றவரைக் காப்பாற்றிய பொது மக்கள்

வெள்ளக்கோவிலில் சாலையில் விழுந்து உயிருக்குப் போராடிய ஆதரவற்றவரை பொது மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

வெள்ளக்கோவிலில் சாலையில் விழுந்து உயிருக்குப் போராடிய ஆதரவற்றவரை பொது மக்கள் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற பலா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், அவா்களில் 65 வயதான முதியவா் ஒருவா் பேருந்து நிலைய சாலையில் மயங்கி விழுந்து காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா்.

இதனைப் பாா்த்த பொது மக்கள் மற்றும் சமூக சேவகா் நாகராஜ் ஆகியோா் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனா். மருத்துவ உதவியாளா்கள் முதலுதவி செய்து அவரை காங்கயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.