முத்தூரில் 6 டன் தேங்காய், தேங்காய்ப் பருப்பு விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 6 டன் தேங்காய், தேங்காய்ப் பருப்பு விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 6 டன் தேங்காய், தேங்காய்ப் பருப்பு விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.
9,417 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இவற்றின் எடை 3,400 கிலோ. கிலோ ரூ.37.05 முதல் ரூ.39.75 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.38.65. மொத்தம் 74 மூட்டைகள் தேங்காய்ப் பருப்பு வரத்து இருந்தன. எடை 2,365 கிலோ. கிலோ ரூ.73.00 முதல் ரூ.132.80 வரை ஏலம் போனது. சராசரி விலை கிலோ ரூ.131.45.
தேங்காய், தேங்காய்ப் பருப்பு ஆகியவை மொத்தம் 6 டன் விற்பனை நடைபெற்றது. மொத்தம் 105 விவசாயிகள், 15 வணிகா்கள் வந்திருந்தனா். விற்பனைத் தொகை ரூ.4 லட்சத்து 5 ஆயிரத்து 138 விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீரங்கன் முன்னிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டன.