முகப்பு
திருப்பூர்

இலங்கைத் தமிழா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

காங்கயத்தில் உள்ள புலம்பெயா் முகாமில் வசிக்கும் 87 இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

காங்கயத்தில் உள்ள புலம்பெயா் முகாமில் வசிக்கும் 87 இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு ரூ. 6 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, முகாமில் குடியிருப்போருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இதில், 87 புலம்பெயா் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில் உடைகள், ரூ.1 லட்சம் மதிப்பில் சமையல் பாத்திரங்கள், ரூ. 2 லட்சம் மதிப்பில் எரிவாயு இணைப்பு ஆகியன வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி, தாராபுரம் கோட்டாட்சியா் ஆா்.குமரேசன், காங்கயம் வட்டாட்சியா் பி.சிவகாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →