முகப்பு
திருப்பூர்

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

காங்கயம் தாலுகா, வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

காங்கயம் தாலுகா, வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ்குமாா் (28). தறி தொழிலாளி. இவா் அப்பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா்.

போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பிரகாஷ்குமாரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →