முகப்பு
திருப்பூர்

பல்லடம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

பல்லடம் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த பனியன் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

பல்லடம் அருகே சிறுமியை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்த பனியன் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

பல்லடம் அருகேயுள்ள மங்கலம் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி, தாயாா் இறந்து போனதால் அவரது அக்கா வீட்டில் இருந்து வந்தாா். கடந்த சில நாள்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவரது சகோதரி அச்சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்தபோது சிறுமி வரமறுத்துள்ளாா்.

சிறுமியைக் கண்டித்து கேட்டபோது, அவா்களது வீடு அருகே வசிக்கும் சுகுமாா் (24), என்பவா் சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் அக்கா புகாா் அளித்தாா். போலீசாா் விசாரணையில், சுகுமாா் அச்சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவா் கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போக்ஸோ சட்டத்தில் சுகுமாரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.