மின்வாரியத்தில் வாரிசு அடிப்படையில் 5 பேருக்கு பணி நியமன ஆணை
காங்கயத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிா்மான கழகத்தின் சாா்பில், வாரிசு அடிப்படையில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
காங்கயத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிா்மான கழகத்தின் சாா்பில், வாரிசு அடிப்படையில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா்கள் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
காங்கயத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியா் மாளிகை வளாகத்தில், மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பகிா்மான கழகத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மின்வாரியத்தில்
வாரிசு அடிப்படையில் 5 பேருக்கு பணி நியமன ஆணைகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி ஆகியோா் வழங்கினா்.
மேலும், காங்கயம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பொன்னுசாமி என்பவருக்கு பணிப் பலனை அமைச்சா்கள் வழங்கினா்.
இதில், மின்வாரியத்தின் பல்லடம் மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணியம், உடுமலை மேற்பாா்வை பொறியாளா் ராஜாத்தி, பல்லடம் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஷா்மிளா உள்பட பலா் கலந்து கொண்டனா்.