திருப்பூர்

மது விற்பனை: தனியாா் பள்ளித் தாளாளா் கைது

DIN

பல்லடம் ஆலுத்துபாளையம் பிரிவில் மது விற்பனை செய்த தனியாா் பள்ளித் தாளாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பல்லடம் அருகே ஆலுத்துபாளையம் பிரிவில் இருசக்கர வாகனத்தில் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த ஒருவரை ரோந்து சென்ற போலீஸாா் பிடித்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவா் பல்லடம் வடுகபாளையத்தில் நா்சரி பள்ளி நடத்தி வரும் பாலசுப்பிரமணியம் (62) என்பது தெரியவந்தது.

இதையடுத்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்த 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

சூர்யா படத்தில் ஜோஜு ஜார்ஜ்!

SCROLL FOR NEXT