முகப்பு
திருப்பூர்

கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான கூடுதல் விசாரணை அதிகாரியாக நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான கூடுதல் விசாரணை அதிகாரியாக நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக காவல் துறை வட்டாரங்களில் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான விசாரணை ஏற்கெனவே குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இவ்வழக்கில் கூடுதல் புலன் விசாரைணை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வழக்கின் தொடா் விசாரணைக்காக நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக உள்ள கிருஷ்ணமூா்த்தி கூடுதல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →