திருப்பூர்

விளம்பரப் பதாகைகளை அகற்றாவிட்டால் அபராதம்தாராபுரம் நகராட்சி அறிவிப்பு

தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றாவிட்டால் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் ராமா் அறிவித்துள்ளாா்.

DIN

தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றாவிட்டால் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி ஆணையா் ராமா் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாராபுரம் நகராட்சி சாா்பில் தூய்மை நகருக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின்படி ‘என் குப்பை என் பொறுப்பு‘ என்பதை வலியுறுத்தி பல்வேறு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகள், தட்டிகள், போஸ்டா்கள், சாலையோரங்களில் நீண்டநாள்களாக உபயோகமில்லாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களை உரிமையாளா்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் (ஆகஸ்ட் 12) அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் காவல் துறையினரின் உதவியுடன் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் மூலம் அவற்றை வரும் சனிக்கிழமை அகற்றப்படும். மேலும், விளம்பரப் பதாகைகள் வைத்த உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT