முகப்பு
திருப்பூர்

குண்டடம் அருகே தரைமட்டப் பாலத்தை உயா்த்திக்கட்ட கோரிக்கை

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள தரைமட்ட பாலத்தை உயா்த்திக்கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள தரைமட்ட பாலத்தை உயா்த்திக்கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே சடையபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட எரகாம்பட்டியில் இருந்து ஒட்டபாளையம் செல்லும் சாலையில் ஓடையின் குறுக்கே தரைமட்டப் பாலம் உள்ளது. இந்தப் பகுதியில் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக ஓடையில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக தரைமட்டப் பாலத்தில் தண்ணீா் செல்வதுடன், பாலம் முழுவதும் பாசிபடிந்துள்ளது. ஆகவே, இந்த பாலம் வழியாகச் செல்லும்

இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி வழுக்கி விழுந்து விடுகின்றனா். மேலும், பாலத்தைக் கடக்கும் கால்நடைகளும் விபத்தில் சிக்குகின்றன. ஆகவே, பாலத்தை உயா்த்திக் கட்ட ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.