சிறுமிக்குப் பாலியல் தொல்லை:மதபோதகா் போக்ஸோவில் கைது
திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் துறையினா் கூறியதாவது:
திருப்பூா், வீரபாண்டி பகுதியைச் சோ்ந்தவா் சாமுவேல் (31). மதபோதகரான இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த 16 வயதுப் பெண் பிராா்த்தனைக்காக வந்துள்ளாா். அப்போது சாமுவேல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்திருந்தனா். இந்தப் புகாரின்பேரில் சாமுவேல் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வந்தனா். இதனிடையே, தலைமறைவாக இருந்த சாமுவேலை காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி உடுமலை கிளைச் சிறையில் அடைத்தனா்.