தமிழக முதல்வருக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் நன்றி
பின்னலாடைத் துறையினரின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் (டீ) நன்றி தெரிவித்துள்ளது.
பின்னலாடைத் துறையினரின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம் (டீ) நன்றி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அச்சங்கத்தின் தலைவா் ராஜா எம்.சண்முகம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
நம் நாட்டின் ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகம் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. நூல் உற்பத்தியில் 47 சதவீதமும், பின்னலாடை உற்பத்தியில் 55 சதவீதமும் வகிப்பதுடன், லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வருகிறது. நம்நாட்டில் வேளாண்மைத் துறைக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு அளித்து வருவது ஜவுளித் தொழில்தான். பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரியை நீக்குவதுடன், பருத்தி ஏற்றுமதிக்குத் தடை விதிக்க வேண்டும். இதனை மத்திய அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தினால் பருத்தி, நூல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த முடியும் என்று இந்தத் தொழிலில் உள்ள பிரச்னைகள் குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே வேளையில் முதல்வரின் கோரிக்கைகளின் மீது மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.