மூலனூரில் ரூ. 4 கோடிக்கு பருத்தி விற்பனை
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 4 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 4 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.
இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 1,104 விவசாயிகள் 9,746 மூட்டைகளில் 3,195 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 28 வணிகா்கள் இவற்றை வாங்க வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ. 11,980 முதல் ரூ. 14,399 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 12,950. கடந்த வார சராசரி விலை ரூ. 12,750. மொத்தம் ரூ. 4 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.
ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக் குழு முதுநிலை செயலாளா் ஆா்.பாலசந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.