முகப்பு
திருப்பூர்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் வெள்ளிக்கிழமை

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பல்லடம் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு பல்லடம் தலைவா் ராமலிங்கம் ( சம்மேளனம் ) தலைமை வகித்தாா். தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளா் பெடரேஷன் திருப்பூா் மாவட்டச் செயலாளா் கந்தசாமி பேசினாா்.

தொடா்ந்து, மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய உயா்வு வழங்க வேண்டும். பணியாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சிஐடியூ தொழிற்சங்க செயலாளா் ராமலிங்கம், ஐக்கிய சங்க செயலாளா் ரவிசந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டன்ா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.