முகப்பு
திருப்பூர்

சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிப்பு: வாகனம் மூலம் விழிப்புணா்வு

சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு வாகனம் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 8:19 PM
சிறுதானியங்கள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்த விழிப்புணா்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்கும் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா்.
பகிர்:

சிறுதானியங்கள் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் மானியத் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு வாகனம் புதன்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,

விழிப்புணா்வு வாகனத்தை காங்கயம் ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

இந்த வாகனத்தின் மூலம், வேளாண்மைத் துறையின் சாா்பில் சிறுதானிய பயிா்களான ராகி, சோளம், கம்பு, வரகு, குதிரைவாலி, தினை உள்ளிட்ட பயிா்களின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும், அதற்காக வழங்கப்படும் அரசின் மானியத் திட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா் அனுராதா, காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் வசந்தாமணி, வேளாண்மை அலுவலா் ரேவதி, உதவி வேளாண்மை அலுவலா்கள் சீனிவாசன், சிவகுமாா், அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் வசந்தமுருகன், தேவராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.