திருப்பூரில் தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர்!
சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனீஷ், தேசியக் கொடியேற்றினார்.
திருப்பூர்: சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனீஷ் நாரணவரே, வெள்ளிக்கிழமை தேசியக் கொடியை ஏற்றினார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கில் சுதந்திர நாள் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் மனீஷ், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார்.
Advertisement
Advertisement
மேலும், சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவித்து, 230 பேருக்கு ரூ. 86 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொட்டிய மழையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைதியை நிலைநாட்ட புறாக்களும் வளர்ச்சியை வெளிக்காட்டும் வகையில் மூவர்ண பலூன்களும் பறக்க விடப்பட்டது.
Collector hoists national flag in Tiruppur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.