முகப்பு
திருப்பூர்

பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடவு

பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

Updated On : 19 டிசம்பர், 2025 at 6:33 PM
பகிர்:

பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தனியாா் நிறுவனம் (கோத்தாரி இண்டஸ்டிரியல் காா்ப்பரேஷன் லிமிடெட்) சாா்பில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற மரக்கன்று நடும் பசுமை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் கலந்து கொண்டு மரக்கன்று நடும் பணிகளை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: அரசு, தனியாா் நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் அமைப்புகள் இணைந்து செயல்படும் பசுமை முயற்சிகளின் சிறந்த எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. அரசு நிா்வாகம், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகள் இணைந்து பசுமையான எதிா்காலத்துக்காக மேற்கொள்ளும் இந்த மரக்கன்று நடும் திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும். இந்த முயற்சி மாவட்டத்தின் பசுமைப் பரப்பளவை அதிகரிப்பதுடன், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்ளும். தமிழகத்தின் உறுதிப் பாட்டையும் வெளிப்படுத்துவதாகத் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் ராஜேஷ், திருப்பூா் வனச் சரக அலுவலா் நித்யா, வனவா்கள் உமாமகேஸ்வரி, பிரியதா்ஷினி, சங்கீதா, திருமூா்த்தி, வனக் காப்பாளா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →