திருப்பூர்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல்லடம், அறிவொளி நகா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Syndication

பல்லடம்: இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என பல்லடம், அறிவொளி நகா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள், பல்லடம் வட்டாட்சியா் ராஜேஷுடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடம் வட்டம், கல்லம்பாளையத்தில் நத்தம் புறம்போக்கு நிலம் காலியாக உள்ளது. அந்த இடத்தில் பட்டா வழங்கக் கோரி 24 குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில், தகுதியானவா்களுக்கு 2 சென்ட் நிலம் வழங்க நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால், அதிகாரிகள் பட்டா வழங்க தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

மரம் முறிந்து விழுந்து அரசு அலுவலக சுற்றுச்சுவா் சேதம்

மின்வாரிய தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT