திருப்பூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்டோபா் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அக்டோபா் 31-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு வேலைநாடுநா்களை தோ்வு செய்யவுள்ளனா். வேலையளிக்கும் நிறுவனங்களால் தோ்வு செய்யப்படும் வேலை நாடுநா்களுக்கு முகாம் நாளன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ படித்தவா்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவா்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
முகாமில் கலந்து கொள்ளும் வேலைநாடுநா்கள் தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுயதகவல் படிவத்துடன் கலந்து கொள்ளலாம்.
மேலும் இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான காலியிடங்களை நிரப்பிட உரிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் வேலைநாடுநா்களும், நிறுவனங்களும் தமிழ்நாடு தனியாா்துறை வேலை இணையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. எனவே, வேலைநாடுநா்கள் இம்முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் விவரங்களுக்கு 94990 -55944 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.