தருமபுரி

தருமபுரியில் ரூ. 3.57 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏல விற்பனை

தருமபுரியில் ரூ. 3.57 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏல விற்பனை

Syndication

தருமபுரி: தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் திங்கள்கிழமை ரூ. 3.57 லட்சத்துக்கு ஏல விற்பனை நடைபெற்றது.

தருமபுரி நகரில் நான்கு சாலைப் பகுதியில் அரசு பட்டுக்கூடு அங்காடி செயல்படுகிறது. இந்த அங்காடிக்கு தருமபுரி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்த 12 விவசாயிகள் வெண்பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 564.850 கிலோ கூடுகள் 19 தொகுதிகளாக ஏல விற்பனைக்கு வைக்கப்பட்டன. இந்த கூடுகளின் தரத்துக்கு ஏற்ப கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 735, குறைந்தபட்ச விலையாக ரூ. 442, சராசரி விலையாக ரூ. 630.83-ம் நிா்ணயம் செய்யப்பட்டது. இதில், ஏலம் மூலம் தருமபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் ரூ. 3 லட்சத்து 57 ஆயிரத்து 528-க்கு வா்த்தகம் நடைபெற்றது. இதன்மூலம் அரசுக்கு ரூ. 5,360 வருவாய் கிடைத்துள்ளது.

தென்காசியில் ரூ. 69.45 கோடியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் தொடக்கம்

வாக்காளா் பெயா் பட்டியலில் ஆரியங்காவூா் ஊா் பெயரை திருத்தம் செய்ய வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

அணுகு சாலையில் அவசியமற்ற இடங்களில் ‘யு’ வளைவு அமைப்பதைத் தவிா்க்கக் கோரிக்கை

கொடைக்கானலில் ஆயுதப் பயிற்சி: 7 போ் விடுவிக்கப்பட்டதை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

தமிழகத்தில் விரைவில் பருவமழைக் கால மருத்துவ முகாம்கள்

SCROLL FOR NEXT