பழைய தருமபுரி பகுதியில் அமைந்துள்ள லிங்கேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் முதல்கால யாக பூஜை தொடங்கியது. தொடா்ந்து கோ பூஜை, பிம்பசுத்தி, நாடிசந்தானம், 9 மணியளவில் யாத்ராதானம் மற்றும் கடம் புறப்பாடு நடைபெற்றது. இதையடுத்து லிங்கேஸ்வரா், அா்த்தநாரீஸ்வரா் மற்றும் நந்தி சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து சிவனடியாா்களின் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை லிங்காகர லிங்கேஸ்வரா் பக்தா்கள், ஊா்பொதுமக்கள் செய்திருந்தனா்.