முதியவா் தற்கொலை
தருமபுரி அருகே நோய் குணமாகாத விரக்தியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி அருகே நோய் குணமாகாத விரக்தியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதப்பன் (80). வயிற்று வலியால் அவதியுற்று மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்ட இவா், நோய் குணமடையாததால் விரக்தியில் இருந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை வீட்டில் தூக்கிட்டுக் கொண்டாா்.
அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள் சோதனை செய்ததில் மாதப்பன் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருகின்றனா்.